Monday, November 01, 2010
Vaithikasri November 2010 Editorial
நமது கலாச்சாரத்துக்கும் சாஸ்திர ஸம்ப்ரதாயங்களுக்கும் அடிப்படை நம்பிக்கை தான், அந்த நம்பிக்கை என்பது அறிவு சார்ந்ததாக அமைந்துள்ளது, நமது இந்திரியங்களுக்கு புலப்படாத புண்யம் பாபம் தெய்வம் தர்மம் அதர்மம் ஸ்வர்கம் நரகம் பரலோகம் போன்ற பற்பல விஷயங்களை, தனது தவ வலிமையால் உணர்ந்த மஹர்ஷிகள் யோகிகள் ஸித்தர்கள், நமக்குஉணர்த்துகிறார்கள்,
அவர்களின் சுயநலமற்ற இந்தச் செயலை புரிந்து கொண்டு, அவர்களது வார்த்தைகளை அப்படியே நம்பி நாமும் ஏற்றுக்கொள்கிறோம், இந்த நம்பிக்கைதான் நமது மதத்துக்கு நமது ஆன்மிகப் பயணத்துக்கு அடிப்படையாக அமைகிறது, ஆகவேதான் நமது பழக்க வழக்கங்களை அறிவியல் காரணங்களைக் கொண்டு ஆராயாமல் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டே பலகாலமாக நாம் அனுஷ்டித்து வருகிறோம்,
பலர் நமது சாஸ்திர ஸம்பிரதாயங்களுக்கு விக்ஞான ரீதியான காரணங்களைக் கேட்கிறார்கள், மெய்ஞானத்தை விக்ஞானத்தைக்கொண்டு ஆராய்வதில் ப்ரயோஜனமில்லை, ஆனாலும் முதன் முதலில் நமது ஸம்ப்ரதாயங்களை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இது உதவியாக இருக்குமே என்பதற்காக நமது அறிவுக்குத்தக்கவாறு சிற்சில காரணங்களைக் கூறிவருகிறோம், இது ஒரு சிலருக்கு நமது ஸம்ப்ரதாயத்திலுள்ள அவநம்பிக்கையை போக்கவும் உதவலாம்,
ஆனால் ஒரு சிலர் வெறும் நம்பிக்கையை மட்டும் அடிப்படையாகக்கொண்டு செய்யப்படும் செயல்கள் நீடிக்காது என்கிறார்கள், இது தவறு, உலக ஸ்ருஷ்டி முதல் வேதம் சாஸ்திரம் மஹர்ஷிகளின் வாக்கு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே நமது கலாசாரம் வளர்ந்து வருகிறது, முன்னோக்கிச் செல்கிறது, அறிவை அடிப்படையாகக்கொண்டு செயல்படும் (விக்ஞானிகள்) பலரும் தெய்வ நம்பிக்கையுடனேயே இருக்கிறார்கள், ஏன் தெய்வத்தையே முழுமையாக நம்புகிறார்கள் என்பதே இன்றைய சூழ்நிலை.
நம்பிக்கை அடிப்படையிலான நமது ஹிந்து மதத்துக்கு, கலாசாரத்துக்கு, சாஸ்திர ஸம்பிரதாயங்களுக்கு, தற்சமயம் அரசாங்க ரீதியில் ஓர் அங்கீகாரம் கிடைத்துள்ளது, ஆம், அயோத்தியில் ராமஜன்ம பூமி விஷயத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்புதான் அது,
அகழ்வாராய்ச்சிகள் தஸ்தாவேஜுகள் முதலியவற்றை பரிசீலித்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், ராமர் பிறந்த இடம் இது என்னும் லக்ஷோபலக்ஷம் மக்களின் நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு, அவர்களின் நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்டு, இந்தத் தீர்ப்பு வழங்கப்படுகிறது என்று தீர்ப்பில் நீதியரசர்கள் கூறியிருக்கிறார்கள், தீர்ப்பின் விபரங்களை ஆராயாமல் அதன் ஒரு பகுதியான நம்பிக்கை அடிப்படையிலான இந்தத்தீர்ப்பு என்னும் வாசகத்தை மட்டும் நாம் பார்க்கலாம், நமது தேசம் ஸுதந்திரம் அடைந்தது முதல் ஏராளமான தீர்ப்புகள் வெளியிடப்பட்டிருந்தாலும் நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்டு வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு இதுவாகத்தான் இருக்க முடியும், அறிவுசார்ந்த ரீதியில் செயல்படும் நீதியரசர்கள், ஸுமார் 60 ஆண்டு காலமாக பல விபரங்களை ஆராய்ந்து, நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு என்னும் வாசகத்துடன் வழங்கிய இந்தத் தீர்ப்பு அரசாங்கம் மற்றும் அறிவு சார்ந்த ஸமுதாயம் சார்பாகக் கூறப்பட்ட கருத்தாகவே கொள்ளவேண்டும்,
நமது கலாசாரத்துக்கும் மற்றும் ஒவ்வொரு மதத்திலும் பின்பற்றப்படும் நம்பிக்கை அடிப்படையிலான பற்பல செயல்களுக்கும், இநதத் தீர்ப்பு வருங்காலத்தில் மிகப்பெரும் துணையாக இருக்கும் என்கிறார்கள் படித்த பெரியோர்கள், ஆகவே ஒவ்வொரு மதத்திலும் காணப்படும் நம்பிக்கை அடிப்படையிலான செயல்களை ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும், மற்றவரின் மத ரீதியான நம்பிக்கைகளுக்கு ஒவ்வொருவரும் மதிப்பளிக்க வேண்டும், அதற்கான விக்ஞான ரீதியானக் காரணங்கள் தற்சமயம் நமக்கு புலப்படாவிட்டாலும் கூட, நமது முன்னோர்கள் செய்து வந்த அனுஷ்டானங்களை பூஜை ஜப ஹோமங்கள் தர்ப்பணங்கள் ச்ராத்தங்கள் முதலானவற்றை நாமும் தொடர்ந்து நம்பிக்கையுடன் செய்யவேண்டும்,
விக்ஞான ரீதியான காரணங்கள் மாறினால் நமது செயல்களிலும் சுணக்கம் ஏற்படலாம், ஆகவே எதற்கும் ஏன்? எதற்கு? என்று விக்ஞான ரீதியில் காரணங்களை ஆராய்ந்த பின்பே செய்வது, என்று எண்ணாமல். நமது மத நம்பிக்கை இது. நமது சாஸ்திர ஸம்பிரதாயம் இது. என்று ஏற்றுக்கொண்டு அனுஷ்டானங்களை செய்ய ஆரம்பித்து விட்டு. பிறகு தேவை பட்டால் விக்ஞானரீதியான காரணங்களை புரிந்து கொண்டு, செய்யும் அனுஷ்டானங்களை உறுதிபடுத்திக் கொள்ளலாம், இதுவே நமது முன்னோர்கள் காண்பித்த நடைமுறை,
இவ்வாறு நாம் செய்யும் அனைத்து தெய்வ காரியங்களையும் அனுஷ்டானங்களையும்ச்ரத்தை, விஸ்வாசம், முழு நம்பிக்கையுடன் செய்து முழுமையான பலனையடையவும், மற்றவரின் நம்பிக்கையைஅவமதிக்காமல், மற்றவரின் (மற்ற மதத்தினரின்)நம்பிக்கைகளை யும் மதித்து நடந்துகொள்ளவும், பகவான் நமக்கு அனுக்ரஹிக்கட்டும்,
Vaithikasri October 2010
நமது மதத்திலும் வேதங்களிலும் புராணங்களிலும் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிக கௌரவம் தரப்பட்டிருக்கிறது, பெண்களை ஸாதாரண மனிதரைப்போல் பாவிக்காமல் தெய்வமாகவே கருதி கௌரவம் தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது, வயதான பெண்களை மட்டுமல்லாமல் சிறுவயது பெண் குழந்தையைக் கூட பாலா த்ரிபுர ஸுந்தரியாக கன்னிகையாக பூஜிக்கிறோம், வயதான பெண்களை ஸுவாஸினிகளாக அம்பாளாக பாவித்து பூஜிக்கிறோம்,
ஒரு பெண் (மனைவி) அனுமதியின்றி ஆண்(கணவன்) செய்யும் தானம் தர்மம் போன்றவைகள் பலனைத்தராது, தனது பெற்றோருக்கு செய்யும் ச்ராத்தம் கூட பெண்(மனைவி) கூட இருந்தால்தான் (ஔபாஸன அக்னியில்) நடத்தமுடியும் ,
யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா: என்பதாக எந்தக்குடும்பத்தில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, அங்குதான் அனைத்து தெய்வ பூஜைகளும் விரதங்களும் பலனைத்தரும் என்கிறார் மனு, ஆகவே ஆண்களைவிட பெண்களுக்குத்தான் ஸுலபமாக அனைத்து உரிமைகளும் நமது சாஸ்திரங்களில் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் ஸ்வபாவமாகவே அபலைகள் (உடல் வலிமை குன்றியவர்கள்)என்பதால் அவர்களுக்கு அடிக்கடி ஓய்வு தரப்படுகிறது,
அர்த்தானாம் ஆர்ஜநே சைவ வ்யயே சைவ நியோஜயேத் என்று , ஸம்பாதிக்கும் பணத்தைசொத்தைபொருளை வீட்டுப் பெண்களிடம் மனைவியிடம் ஒப்படைத்து , அவர்கள் மூலமாக அவற்றை சிலவு செய்யச் செய்யவேண்டும் என்கிறது நீதி சாஸ்திரம். இப்படி பெண்களுக்கு அதிகமாக கௌரவம் தரக்காரணம் அவர்களுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும் தபஸ் (கற்பு) சக்திதான், ஆம்
ஆண்கள் பலவிதமாக கஷ்டப்பட்டு பல ஸாதனைகள் செய்து ஸம்பாதிக்கும் தபஸ் சக்தியை பகவான் பெண்களுக்கு இயற்கையாவே அமைத்திருக்கிறார், இந்த சக்திக்குத்தான் பதிவ்ரதா சக்தி எனப்பெயர், தனது நடவடிக்கையின் மூலமும் தனது ஆசாரத்தாலும், அன்பாலும் சிற்சில கட்டுப்பாடுகளாலும் இந்த சக்தியை அனைத்துப் பெண்களும் முன் காலத்தில் பாதுகாத்து வளர்த்து வந்தார்கள், அத்துடன் தேவையான நேரத்தில் அத்தகைய தனது பதிவ்ரதா சக்தியை உபயோகித்தும் வந்தார்கள்.
தனது கணவனை, , கணவன் ஆசைபட்ட தாஸியின் வீட்டுக்கு கூடையில் ஸுமந்து சென்றாள் நளாயினீ என்னும் பதிவிரதை, ஆணி மாண்டவ்யர் சாபமிட்டார், விடிந்தால் உன் கணவனுக்கு மரணம் என்று, கணவனின் மரணத்தைத் தடுக்க வேறு வழி தெரியாத கற்புக்கரசி நளாயினி, ஸூர்யனே உதிக்கக் கூடாது என்று ஆணையிட்டாள், ஸூர்யனும் உதிக்கவில்லை, பிறகு தேவர்களின் ப்ரார்தனைக்கிணங்க மறுபடி ஸூர்யனை உதிக்கச்செய்தாள், ஸ்ரீமத் ராமாயணத்தில் ஓர் ஸம்பவம் ஸ்ரீ ராமரின் தர்மபத்னி ஸீதாதேவி ராவணணிடம் தனது கற்பின் பெருமைகளைக் கூறுகிறாள்,
அஸந்தே3சாத் து ராமஸ்ய தபஸசாநு பாலநாத்
ந த்வாம் குர்மி த3க்3ரீவ ப4ஸ்ம ப4ஸ்மார்ஹ! தேஜஸா
ராவணா!,நீ செய்யும் கொடுமைகளுக்கு நான் நினைத்தால் உன்னை எனது கற்புக்கனலால் எரித்து சாம்பலாக்கிவிடுவேன், ஆனால் நான் செய்யமாட்டேன், ஏன் தெரியுமா!, எனது கணவர் எனக்கு (ஆபத்காலத்தில் உனது பதிவ்ரதா சக்தியை உபயோகித்திக்கொள் என்று)ஆணையிடவில்லை, அவர் ஸம்மதமின்றி நான் செய்ய மாட்டேன், ஆகவே நான் உன்னை விட்டுவிடுகிறேன் என்கிறாள், இதுதான் பதிவ்ரதா சக்தி,
கற்புத் தவறாத மங்கையர்க்கோர் மழை பதிவ்ரதா சக்தியுடன் திகழும் மாதர்க்காக மாதம் ஒருமுறை மழை பெய்யும் என்கிறாள் ஔவை பிராட்டி, கண்ணகி என்னும் கற்புக்கரசி தனது பதிவிரதா சக்தியால் மதுரை மாநகரையே எரித்தாள் என்பதை இலக்கியம் நமக்கு எடுத்துரைக்கிறது, இதைப்போல் நமது தேசப்பெண்கள் தனது பதிவ்ரதா சக்தியின் மூலம் மிகப்பெரும் காரியங்களையும் ஸாதித்துள்ளனர், ஆனால் இன்றைய பெண்களிடமும் அத்தகைய சக்தி இருக்கிறதா? என்று கேட்டால், ஆம் இன்றளவும் அனைத்து பெண்களிடமும் இத்தகைய சக்தி இருக்கத்தான் செய்கிறது என்பதுதான் பதில்,
ஆனால் இன்றைய பெண்கள் இத்தகைய சக்தியை வெளிப்படுத்துவதில்லை, ஏன் என்றால் பெண்கள் பலர் தன்னிடம் இத்தகைய பதிவ்ரதா சக்தி இருப்பதையே தெரிந்து கொள்ளவில்லை, மேலும் பலர் ஸ்வபாவமாக (இயற்கையாக) அமைந்த இந்த தனது சக்தியை பாதுகாக்கத் தெரியாமல் வழிதவறி இழந்து விட்டார்கள், பலர் இழந்து கொண்டிருக்கிறார்கள், இதற்குக்காரணம் பதிவ்ரதா சக்தியை ஸரியாக பாதுகாக்காததுதான், இதை பாதுகாக்கும் வழிமுறைகளாக பெண்கள் சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்,
எப்போதும் தந்தை கணவர் மகன் என்னும் பாதுகாப்பு வட்டத்தில் வாழ வேண்டும், குல ஸம்ப்ரதாயங்களை அனுஸரித்து, செய்ய வேண்டிய (குலதைவ ப்ரார்த்தனைஸமராதனை போன்றவற்றை) செய்யச் செய்ய வேண்டும், செய்யக்கூடாத செயல்களிலிருந்து குழந்தைகளை கணவனை தடுக்க வேண்டும், தானும் தவிர்க்க வேண்டும், குழந்தைகளுக்கு நல்ல போதனைகளை அளிக்க வேண்டும்,
வேத சாஸ்திரத்தை யனுஸரித்து பற்பல கர்மாக்களை சொல்லி வந்த ஆபஸ்தம்ப மஹர்ஷி, தனது ஆபஸ்தம்ப க்ருஹ்யஸூத்ரபுஸ்தகத்தில் அட்ஞீபீஙஹட்க்ஷீணூஜ்சூ: ஙணூசூணிச்ஙூயு ஆவ்ருத சாஸ்த்ரீப்ய: ப்ரதீயேரன் நான் கூறாத பல குடும்ப ஸம்ப்ரதாயங்களையும் சாஸ்திரங்களையும் குடும்பத்திலுள்ள பெண்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார்,
ஏனென்றால் இன்றும் கூட பல குடும்பங்களிலும் நடைபெறும்தெய்வ பித்ரு காரியங்கள் பெண்களின் தூண்டுதலாலேயே பெண்களின் ஒத்துழைப்பாலேயே நடைபெறுகின்றன, ஆகவே குடும்பத்தில் தனக்குள்ள பொறுப்பை உணர்ந்து கொண்டு பெண்கள் செயல்பட வேண்டும், அவரவர்கள் தாயார் மாமியார் போன்ற பெரியோர்களிடமிருந்து குடும்பப் பழக்க வழக்கங்களைக் கேட்டுத்தெரிந்து கொண்டு, அதன்படி நடக்க முயற்சிக்க வேண்டும்,
பெரியோர்களைக்காண ச் செல்லும் போதும் ஆலயங்களுக்குச்செல்லும் போதும் ஆடை அணிவதிலும் மற்றும் சில விஷயங்களிலும் (தலையை விரித்துப்போட்டுக்கொள்ளாமல் இருத்தல், ஆசாரமாக ஆடை அணிதல்) சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், முன்னோர் ஆசாரப்படி சாஸ்திரப்படி தனது கணவனையும் தனது குழந்தைகளையும் அழைத்துச்செல்வதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு வாஸுகி தேவி பதிவ்ரதையுடன் கணவருக்குப் பணிவிடை செய்ததால்தான் இன்றையதினம் நமக்கு ஐயன் வள்ளுவன் மூலம் திருக்குறள் என்னும் பொக்கிஷம் கிடைத்துள்ளது, ஒரு சாரதாதேவியின் அனுகூலத்தால்தான் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் உலகம் போற்றும் உத்தம ஞானியானார், குடும்பத்தைத் துறந்து விட்டு தபஸ் செய்யக்கிளம்பிய யாக்ஞவல்க்ய மஹர்ஷியை தடுத்து நிறுத்தி தாங்கள் எதை (மரணமற்ற தன்மையை) நோக்கிச் செல்லுகிறீர்களோ எனக்கும் அந்த வழியை காட்டிவிட்டு, என்னையும் அந்த வழியிலேலே அழைத்துச்செல்லுங்கள் ,என்று தைரியமாகக் கூறினாள் மைத்ரேயி,
ஆகவேவயதானவர்கள் வயதான காலத்தில் பொருப்புகளை தனது நாட்டுப்பெண், பெண், முதலானவர்களிடம் ஒப்படைத்து ஆத்யாத்மிக விஷயத்தில் ஈடுபட முயற்சிக்க வேண்டும். நமது பாரததேசப்பெண்களுக்குத்தான் இத்தகைய பதிவ்ரதா சக்தி அதிகமாக இயற்கையாகவே பகவானால் அளிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு பெண்களும் தனக்குள்ள சக்தியை உணர்ந்து கொண்டு அதன்படி நடந்து கொண்டு தனது தபஸ் சக்தியை பாதுகாத்து வளர்த்து இந்த தேசத்திற்கும் தனக்கும் நன்மையை செய்ய பகவான் அனுக்ரஹிக்கட்டும்.
ஒரு பெண் (மனைவி) அனுமதியின்றி ஆண்(கணவன்) செய்யும் தானம் தர்மம் போன்றவைகள் பலனைத்தராது, தனது பெற்றோருக்கு செய்யும் ச்ராத்தம் கூட பெண்(மனைவி) கூட இருந்தால்தான் (ஔபாஸன அக்னியில்) நடத்தமுடியும் ,
யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா: என்பதாக எந்தக்குடும்பத்தில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, அங்குதான் அனைத்து தெய்வ பூஜைகளும் விரதங்களும் பலனைத்தரும் என்கிறார் மனு, ஆகவே ஆண்களைவிட பெண்களுக்குத்தான் ஸுலபமாக அனைத்து உரிமைகளும் நமது சாஸ்திரங்களில் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் ஸ்வபாவமாகவே அபலைகள் (உடல் வலிமை குன்றியவர்கள்)என்பதால் அவர்களுக்கு அடிக்கடி ஓய்வு தரப்படுகிறது,
அர்த்தானாம் ஆர்ஜநே சைவ வ்யயே சைவ நியோஜயேத் என்று , ஸம்பாதிக்கும் பணத்தைசொத்தைபொருளை வீட்டுப் பெண்களிடம் மனைவியிடம் ஒப்படைத்து , அவர்கள் மூலமாக அவற்றை சிலவு செய்யச் செய்யவேண்டும் என்கிறது நீதி சாஸ்திரம். இப்படி பெண்களுக்கு அதிகமாக கௌரவம் தரக்காரணம் அவர்களுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும் தபஸ் (கற்பு) சக்திதான், ஆம்
ஆண்கள் பலவிதமாக கஷ்டப்பட்டு பல ஸாதனைகள் செய்து ஸம்பாதிக்கும் தபஸ் சக்தியை பகவான் பெண்களுக்கு இயற்கையாவே அமைத்திருக்கிறார், இந்த சக்திக்குத்தான் பதிவ்ரதா சக்தி எனப்பெயர், தனது நடவடிக்கையின் மூலமும் தனது ஆசாரத்தாலும், அன்பாலும் சிற்சில கட்டுப்பாடுகளாலும் இந்த சக்தியை அனைத்துப் பெண்களும் முன் காலத்தில் பாதுகாத்து வளர்த்து வந்தார்கள், அத்துடன் தேவையான நேரத்தில் அத்தகைய தனது பதிவ்ரதா சக்தியை உபயோகித்தும் வந்தார்கள்.
தனது கணவனை, , கணவன் ஆசைபட்ட தாஸியின் வீட்டுக்கு கூடையில் ஸுமந்து சென்றாள் நளாயினீ என்னும் பதிவிரதை, ஆணி மாண்டவ்யர் சாபமிட்டார், விடிந்தால் உன் கணவனுக்கு மரணம் என்று, கணவனின் மரணத்தைத் தடுக்க வேறு வழி தெரியாத கற்புக்கரசி நளாயினி, ஸூர்யனே உதிக்கக் கூடாது என்று ஆணையிட்டாள், ஸூர்யனும் உதிக்கவில்லை, பிறகு தேவர்களின் ப்ரார்தனைக்கிணங்க மறுபடி ஸூர்யனை உதிக்கச்செய்தாள், ஸ்ரீமத் ராமாயணத்தில் ஓர் ஸம்பவம் ஸ்ரீ ராமரின் தர்மபத்னி ஸீதாதேவி ராவணணிடம் தனது கற்பின் பெருமைகளைக் கூறுகிறாள்,
அஸந்தே3சாத் து ராமஸ்ய தபஸசாநு பாலநாத்
ந த்வாம் குர்மி த3க்3ரீவ ப4ஸ்ம ப4ஸ்மார்ஹ! தேஜஸா
ராவணா!,நீ செய்யும் கொடுமைகளுக்கு நான் நினைத்தால் உன்னை எனது கற்புக்கனலால் எரித்து சாம்பலாக்கிவிடுவேன், ஆனால் நான் செய்யமாட்டேன், ஏன் தெரியுமா!, எனது கணவர் எனக்கு (ஆபத்காலத்தில் உனது பதிவ்ரதா சக்தியை உபயோகித்திக்கொள் என்று)ஆணையிடவில்லை, அவர் ஸம்மதமின்றி நான் செய்ய மாட்டேன், ஆகவே நான் உன்னை விட்டுவிடுகிறேன் என்கிறாள், இதுதான் பதிவ்ரதா சக்தி,
கற்புத் தவறாத மங்கையர்க்கோர் மழை பதிவ்ரதா சக்தியுடன் திகழும் மாதர்க்காக மாதம் ஒருமுறை மழை பெய்யும் என்கிறாள் ஔவை பிராட்டி, கண்ணகி என்னும் கற்புக்கரசி தனது பதிவிரதா சக்தியால் மதுரை மாநகரையே எரித்தாள் என்பதை இலக்கியம் நமக்கு எடுத்துரைக்கிறது, இதைப்போல் நமது தேசப்பெண்கள் தனது பதிவ்ரதா சக்தியின் மூலம் மிகப்பெரும் காரியங்களையும் ஸாதித்துள்ளனர், ஆனால் இன்றைய பெண்களிடமும் அத்தகைய சக்தி இருக்கிறதா? என்று கேட்டால், ஆம் இன்றளவும் அனைத்து பெண்களிடமும் இத்தகைய சக்தி இருக்கத்தான் செய்கிறது என்பதுதான் பதில்,
ஆனால் இன்றைய பெண்கள் இத்தகைய சக்தியை வெளிப்படுத்துவதில்லை, ஏன் என்றால் பெண்கள் பலர் தன்னிடம் இத்தகைய பதிவ்ரதா சக்தி இருப்பதையே தெரிந்து கொள்ளவில்லை, மேலும் பலர் ஸ்வபாவமாக (இயற்கையாக) அமைந்த இந்த தனது சக்தியை பாதுகாக்கத் தெரியாமல் வழிதவறி இழந்து விட்டார்கள், பலர் இழந்து கொண்டிருக்கிறார்கள், இதற்குக்காரணம் பதிவ்ரதா சக்தியை ஸரியாக பாதுகாக்காததுதான், இதை பாதுகாக்கும் வழிமுறைகளாக பெண்கள் சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்,
எப்போதும் தந்தை கணவர் மகன் என்னும் பாதுகாப்பு வட்டத்தில் வாழ வேண்டும், குல ஸம்ப்ரதாயங்களை அனுஸரித்து, செய்ய வேண்டிய (குலதைவ ப்ரார்த்தனைஸமராதனை போன்றவற்றை) செய்யச் செய்ய வேண்டும், செய்யக்கூடாத செயல்களிலிருந்து குழந்தைகளை கணவனை தடுக்க வேண்டும், தானும் தவிர்க்க வேண்டும், குழந்தைகளுக்கு நல்ல போதனைகளை அளிக்க வேண்டும்,
வேத சாஸ்திரத்தை யனுஸரித்து பற்பல கர்மாக்களை சொல்லி வந்த ஆபஸ்தம்ப மஹர்ஷி, தனது ஆபஸ்தம்ப க்ருஹ்யஸூத்ரபுஸ்தகத்தில் அட்ஞீபீஙஹட்க்ஷீணூஜ்சூ: ஙணூசூணிச்ஙூயு ஆவ்ருத சாஸ்த்ரீப்ய: ப்ரதீயேரன் நான் கூறாத பல குடும்ப ஸம்ப்ரதாயங்களையும் சாஸ்திரங்களையும் குடும்பத்திலுள்ள பெண்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார்,
ஏனென்றால் இன்றும் கூட பல குடும்பங்களிலும் நடைபெறும்தெய்வ பித்ரு காரியங்கள் பெண்களின் தூண்டுதலாலேயே பெண்களின் ஒத்துழைப்பாலேயே நடைபெறுகின்றன, ஆகவே குடும்பத்தில் தனக்குள்ள பொறுப்பை உணர்ந்து கொண்டு பெண்கள் செயல்பட வேண்டும், அவரவர்கள் தாயார் மாமியார் போன்ற பெரியோர்களிடமிருந்து குடும்பப் பழக்க வழக்கங்களைக் கேட்டுத்தெரிந்து கொண்டு, அதன்படி நடக்க முயற்சிக்க வேண்டும்,
பெரியோர்களைக்காண ச் செல்லும் போதும் ஆலயங்களுக்குச்செல்லும் போதும் ஆடை அணிவதிலும் மற்றும் சில விஷயங்களிலும் (தலையை விரித்துப்போட்டுக்கொள்ளாமல் இருத்தல், ஆசாரமாக ஆடை அணிதல்) சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், முன்னோர் ஆசாரப்படி சாஸ்திரப்படி தனது கணவனையும் தனது குழந்தைகளையும் அழைத்துச்செல்வதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு வாஸுகி தேவி பதிவ்ரதையுடன் கணவருக்குப் பணிவிடை செய்ததால்தான் இன்றையதினம் நமக்கு ஐயன் வள்ளுவன் மூலம் திருக்குறள் என்னும் பொக்கிஷம் கிடைத்துள்ளது, ஒரு சாரதாதேவியின் அனுகூலத்தால்தான் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் உலகம் போற்றும் உத்தம ஞானியானார், குடும்பத்தைத் துறந்து விட்டு தபஸ் செய்யக்கிளம்பிய யாக்ஞவல்க்ய மஹர்ஷியை தடுத்து நிறுத்தி தாங்கள் எதை (மரணமற்ற தன்மையை) நோக்கிச் செல்லுகிறீர்களோ எனக்கும் அந்த வழியை காட்டிவிட்டு, என்னையும் அந்த வழியிலேலே அழைத்துச்செல்லுங்கள் ,என்று தைரியமாகக் கூறினாள் மைத்ரேயி,
ஆகவேவயதானவர்கள் வயதான காலத்தில் பொருப்புகளை தனது நாட்டுப்பெண், பெண், முதலானவர்களிடம் ஒப்படைத்து ஆத்யாத்மிக விஷயத்தில் ஈடுபட முயற்சிக்க வேண்டும். நமது பாரததேசப்பெண்களுக்குத்தான் இத்தகைய பதிவ்ரதா சக்தி அதிகமாக இயற்கையாகவே பகவானால் அளிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு பெண்களும் தனக்குள்ள சக்தியை உணர்ந்து கொண்டு அதன்படி நடந்து கொண்டு தனது தபஸ் சக்தியை பாதுகாத்து வளர்த்து இந்த தேசத்திற்கும் தனக்கும் நன்மையை செய்ய பகவான் அனுக்ரஹிக்கட்டும்.
Subscribe to:
Posts (Atom)