Let a Vedic priest enter your home every month

Let a Vedic Priest Enter Your Home Every Month

Search This Blog

Saturday, March 21, 2009

Vaithikasri February 2009

நமதுதேசத்தின் கலாசாரத்தை மற்ற தேசங்களுக்கு வெளிப்படுத்துபவை நமது ஆலயங்களே. ஒவ்வொரு ஊரிலும் பற்பல தெய்வ ஆலயங்கள், கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று போன்ற பழமொழிகளும் ஆலயங்களின் பெருமைகளை நமக்கு எடுத்துரைக்கின்றன,

ஆபி4ரூப்யாச்ச மூர்த்தீனாம் தே3வ: ஸான்னித்4யம்ருச்ச2தி என்பதாக ஆலயங்களில் தெய்வ உருவங்களை (சில்ப) சாஸ்திர முறைப்படி வடிவமைப்பதாலும், அர்ச்சகஸ்ய ப்ரபா4வேன சிலா ப4வதி கேவ:(ங்கர:). என்பதாக சிலைகளை ஆகம வைதீக தாந்த்ரீக முறைப்படி ப்ரதிஷ்டை செய்து பூஜைகள் செய்யப் படுவதாலும், வருடாவருடம் திருவிழாக்கள் நடத்தப் படுவதாலும் தெய்வங்களுக்கு அருட்சக்தி ஸித்திக்கிறது, (தீக்ஷை பெற்று) வேதம் ஆகம வைதீகம் ப்ரயோகங்கள் கற்று, தெய்வங்களை பூஜை செய்யும் அர்ச்சகர்கள் (சிவாச்சார்யர்கள்) தெய்வ அருளை மக்களுக்கு பெற்றுத்தருபவர்கள் , புயல் வெள்ளம், போன்ற ஆபத்தான காலங்களிலும் பூஜைகளை தவறாது செய்து வரும் இவர்கள் பொதுமக்களுக்காக ஆற்றும் பணி மிகவும் போற்றத்தக்கது,

ஆனால் தற்காலத்தில் சில அர்ச்சகர்கள் தாங்களது பெருமைகளை முழுமையாக உணராததால் உலகத்துடன் (நாகரிகத்துடன்) கலந்து விடுகின்றார்கள், இவர்களும் தாங்களது தகுதியை உணர்ந்து, வேதம் ஆகமம் ஸம்ஸ்க்ருதம் பாடல்கள் ஆகியவற்றில் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ளலாம்,

பக்தர்களின் பெயர், ராசி சொல்லி அர்ச்சனை, ஸங்கல்பம் சொல்ல ஸம்ஸ்க்ருத ஞானம் அவசியம், அபிஷேகம் தீபாராதனை போன்ற காலங்களில் வேத மந்திரத்தை ஸ்வர சுத்தத்துடன் சொல்ல வேதத்தை முறையாக கற்றுக்கொள்ளுதல் அவசியம். இவற்றுடன் ஆசாரமும் (தூய்மை) அவசியம், முச்சந்தியில் அமைந்திருக்கும் விநாயகரை பூஜிக்கக்கூட ஆசாரம் தேவை.

தினஸரி ஸ்னானம் செய்தல், திருமணமானவர்கள் பஞ்சகச்ச முறையில் வேஷ்டி கட்டிக் கொள்ளுதல், குடுமி வைத்துக் கொள்ளுதல், வெளி இடங்களில் சாப்பிடாது இருத்தல், ஆகியவற்றை ஒவ்வொரு அர்ச்சகரும் எப்போதும் கடைபிடிக்க வேண்டும், தெய்வங்களை பூஜை செய்யும் போதாவது இவ்வாறு இருக்க முயற்சிக்கலாம்,

மக்கள் ஆலயத்தை நாடுகிறார்கள், தெய்வத்தை நம்புகிறார்கள், தெய்வ ஸான்னித்யம் அர்ச்சகர்களின் கையிலுள்ளது, ஆலய தெய்வத்தின் அருளை மக்களுக்குப் பெற்றுத் தரும் பாக்யத்தைப் பெற்றுள்ள அர்ச்சகர்கள், ஆலயத்தில் ஆசாரத்தோடும் ச்ரத்தையோடும் பூஜை செய்யவும் வேத மந்திரங்களை ஸ்வர சுத்தத்துடன் சொல்லவும் ஸ்ரீபகவான் அனுக்ரஹிக்கட்டும்.

1 comment:

gvsivam said...

நமஸ்காரம்,
நானும் ஒரு அர்ச்சகரே.இந்த பதிவில் அர்ச்சகரை பற்றி தாங்கள் கூறியுள்ள கருத்துக்கள் அனைத்தும் ஏற்கக்கூடியதே,அதை நாங்கள் சரிசெய்துகொள்ள உங்களைப் போன்ற சாஸ்த்ரக்ஞரின் உதவி தேவைப்படுகிறது.உதவி செய்வீர்களா?