ஆசிரியர் எண்ணங்கள் july 2010
நமது ஸனாதன தர்மத்துக்கு மூலப்ரமாணமா இருப்பது நமது வேதங்களே, யாராலும் இயற்றப்படாத என்றும் அழியாத இந்த வேதங்கள் இன்று வரை பலரால் காப்பாற்றப்பட்டு வருகின்றன, வேதங்களை அழியாமல் காப்பாற்றுதல் என்றால் அதை முறையாக கற்றுக் கொண்டு அதன்படி செயல்படுதல் எனப்பொருள்,
நாகரீகம் மிகவும் வளர்ந்து விட்ட இன்றைய சூழ்நிலையில்கூட தனது பரம்பரை வழக்கப்படி தன்னைப்போல் தனது குழந்தைகளும் வேதம் அத்யயயனம் செய்ய வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள், குறிப்பாக வைதிகர்கள் புரோஹிதர்கள் அர்ச்சகர்கள்சிவாச்சார்யர்கள் என்னுகிறார்கள், இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம், ஆனாலும் வேதத்தை தனது குழந்தைக்கு தானே தனது வீட்டில் கற்றுக் கொடுக்க இயலாமல் வேத பாடசாலைக்கு அனுப்புகிறார்கள்,
இதற்கு அவர்கள் வஸிக்கும் சின்னஞ்சிறிய வீட்டின் சூழ்நிலை வேதம் கற்றுத்தர பொருமையின்மை நேரமின்மை போன்ற பற்பல காரணங்கள், இருந்தாலும் குழந்தைக்கு உரிய காலத்தில் உபநயனம் செய்து வைத்ததைப்போலவே அந்த குழந்தைக்கு வேதத்தையும் தானே கற்றுத்தர முயற்சிக்க வேண்டும்,
எத்தனையோ குடும்பத்துக்கு புரோஹிதராக இருந்து ஹிதமான ஆலோசனைகள் சொல்லி, வைதிக கார்யங்களை நடத்தி வைப்பவர்கள் தனது குழந்தைக்கு என சிறிது நேரத்தை ஒதுக்கி பொருமையுடன் தான் கற்ற வேதத்தை தனது பிள்ளைகளுக்கு சொல்லித்தரலாம், முழுமையாக முடியாவிட்டாலும் கூட புருஷஸூக்தம் ருத்ரம் சமகம் போன்ற முக்கியமான வேதப்பகுதியையாவது தானே சொல்லி வைக்க முயற்சிக்கலாம்.
உபநயனம் செய்து வைத்து வேதமும் சொல்லித்தருபவரே ஆசார்யர் எனப்படுவார் என்கிறது சாஸ்திரம், ஒவ்வொரு குழந்தைக்கும் அவரவர் தந்தையே முதன் முதல் ஆசார்யன் ஆகிறார், அஷ்ட வர்ஷம் ப்ராஹ்மணம் உபநயீத தம் அத்யாபயீத எட்டு வயதில் தனது பிள்ளைக்கு உபநயனம் செய்து வைத்து வேதமும் கற்றுத்தரவேண்டும் என்கிறார் ஆபஸ்தம்பர் தர்ம ஸூத்ரத்தில்.
ஆகவே தன் வீட்டில் வஸதியில்லை நேரமில்லை பொருமையில்லை போன்ற காரணங்களை பொருட்படுத்தாமல் வைதிகர்கள் புரோஹிதர்கள் அர்ச்சகர்கள் சிவாச்சார்யர்கள் ஆகியோர் தனது வம்ச பரம்பரா ப்ராப்தமான (வேதஆகம) வித்யையை, தானே சிறிதாவது தனது குழந்தைகளுக்கு சொல்லித்தர ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment